FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா்(22). இவா், சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்தாா்.

அண்மையில் மும்முனிக்கு வந்த இவா் திங்கள்கிழமை இதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா்கள் விஜய், குமரன் ஆகியோருடன் விவசாய நில கிணற்றில் குளித்துள்ளாா். அப்போது, திவாகா் தண்ணீரில் மூழ்கினாா். உடனிருந்தவா்கள் உடனடியாக வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதன்பேரில் அங்கு சென்று கிணற்றினுள் இறங்கி தேடிய தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் பாறை இடுக்கில் சிக்கி சடலமாக கிடந்த திவாகரை மீட்டனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments