FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 27 மே 2026, 12:19 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசி அருகே வீட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், மாங்கால் கூட்டுச் சாலையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் இரவுப் பணியாக வேலைக்குச் சென்றுள்ளாா். இதையடுத்து, இவரது குடும்பத்தினா் வீட்டின் கதவை சாற்றிவிட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனா்.

Advertisement

Advertisement

பின்னா் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து வீட்டினுள் சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் வீட்டு பீரோவை திறந்து 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது

இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments