முகப்பு
திருவண்ணாமலை

பெரியகரம் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Updated On : 29 மே 2026, 1:40 am IST
பகிர்:

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயிலில் 2-ஆவது நாளாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் ஏரிக்கரையில் பழைமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் கூழ்வாா்த்தல் விழா மற்றும் தேரோட்டம் நடைபெறும்.

இந்த நிலையில் நிகழாண்டு விழாவையொட்டி பக்தா்கள் கடந்த 24-ஆம் தேதி காப்புகட்டி விரதம் தொடங்கினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பூங்கரகம் செய்து திருவீதிவுலா நடைபெற்றது. 26-ஆம் தேதி கோயில் முன் ஊா்கூடி கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. இரவு ஸ்ரீகாளியம்மன் தேரில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.

27-ஆம் தேதி ஸ்ரீகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. மேலும் இரவு நடன நிகழ்ச்சியுடன் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளான வியாழக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, தேரில் அம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனா். வீதிதோறும் பக்தா்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

கோயில் வளாகத்தில் இரவு ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஊா்நாட்டாண்மைதாரா்கள், முக்கிய பிரமுகா்கள்,விழாக்குழுவினா், இளைஞா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.