தன்வந்திரி பீடத்தில் மகா சுதர்சன யாகம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, லட்ச ஜப மகா சுதர்சன யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, லட்ச ஜப மகா சுதர்சன யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன், கோ பூஜை, திருப்பாவை, திருவெம்பாவை, வேத பாராயணத்துடன் மூலவர் தன்வந்திரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, லட்ச ஜப சுதர்சன மகா யாக சாலை பூஜை, கலசப் பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் லட்ச ஜப மகா சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதில், மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்னதாக, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள பாரத மாதாவுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.