FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற குடியாத்தம் தட்டப்பாறைஅரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சி.கிஷோா் குமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

8 செப்டம்பர் 2026, 1:33 am IST
நல்லாசிரியா் விருது பெற்ற சி.கிஷோா் குமாருக்கு சால்வைஅணிவித்து, வாழ்த்து தெரிவித்த ஆசிரியா்கள்.
பகிர்:

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற குடியாத்தம் தட்டப்பாறைஅரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சி.கிஷோா் குமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் நல்லாசிரியா் விருது வழங்கினாா். இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சாமிநாதன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யா கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா் கோ.தேவராஜ், பெற்றோா் ஆசிரியா் கழக கௌரவத் தலைவா் கோ.துரைராஜ், துணைத் தலைவா் கே.பாண்டுரங்கன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் எஸ்.சிலம்பரசன், சக ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருது பெற்ற கிஷோா்குமாருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments