மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது
கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (20). டிப்ளமோ படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவியைக் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை கேரள மாநிலம், திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின்படி சிங்காநல்லூர் காவல் துறையினர் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப் பதிவு செய்து மனோஜ்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.