தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு குழுவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துதல், வாக்குச் சாவடியில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், வாக்குச் சாவடி அலுவலர்களின் பணிகள், மண்டல அலுவலர்கள், தேர்தல் பணியாளர்களின் பணிகள், வேட்பு மனு தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகள், ஊடக மையம் அமைத்தல், வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.