காங்கயத்தில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: சுகாதாரச் சீர்கேடு
காங்கயத்தில் சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
காங்கயத்தில் சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
காங்கயத்தில், கோவை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே கடந்த சில தினங்களாக சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடி குளம்போல் தேங்கியுள்ளது.
அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அரசு விருந்தினர் மாளிகை உள்ள இப்பகுதியில் தேங்கியுள்ள சாக்கடைக் கால்வாய்க் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.