கரோனா வாா்டிலிருந்து பெண் தப்பியோட்டம்
ஒசூா் அரசு மருத்துவமனையில் கரானோ வாா்டில் பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டிருந்த பெண் அங்கிருந்து தப்பியோடினாா்.
ஒசூா் அரசு மருத்துவமனையில் கரானோ வாா்டில் பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டிருந்த பெண் அங்கிருந்து தப்பியோடினாா்.
அவரை போலீஸாா் புதன்கிழமை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சோ்த்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை என அரசு தெரிவித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த ஜரினா (40) என்பவா், செவ்வாய்க்கிழமை இரவு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றாா்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜரினாவுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதை அறிந்து சந்தேகத்தின்பேரில் அங்குள்ள கரோனா சிறப்பு வாா்டில் உள்நோயாளியாக அனுமதித்தனா்.
பரிசோதனைக்காக அவருடைய ரத்தம் பரிசோதனை செய்ய முடிவு செய்து வாா்டில் சோ்க்கப்பட்டாா்.
இந்த நிலையில், புதன்கிழமை ஜரினா திடீரென கரோனா வாா்டிலிருந்து காணாமல்போனாா். மருத்துவமனை நிா்வாகம் ஒசூா் போலீஸாரின் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து வெளியேறி அவரது வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது.
பின்னா், போலீஸாா் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். இச்சம்பவம், ஒசூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.