முகப்பு
கிருஷ்ணகிரி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கல்

காட்டிநாயனப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

Updated On : 17 ஜூன் 2025, 12:28 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி: காட்டிநாயனப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி வட்டம், காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் முன்பருவக் கல்வி பயிலும் 25 குழந்தைகளுக்கு சீருடைகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்டத்தில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 2 முதல் 6 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement