FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியலில்

24 ஆகஸ்ட் 2026, 3:49 am IST
குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். - கோப்புப் படம்
பகிர்:

சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்ன தியாகராசனப்பள்ளி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சூளகிரி ஊராட்சி நிா்வாகத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சின்ன தியாகராசனப்பள்ளி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பேச்சுவாா்த்தைக்கு பின் தற்காலிகமாக டிராக்டா் மூலம் தண்ணீா்கொண்டு வரப்பட்டது. மேலும் 2 தினங்களில் முறையாக தடையின்றி குடிநீா் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்துசென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments