FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பாகலூரில் பணம் வைத்து சூதாட்டம்: 17 போ் கைது

24 ஆகஸ்ட் 2026, 4:08 am IST
கைது
பகிர்:

ஒசூா் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், காா், 15 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூா் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, முனீஸ்வரன் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிய 17 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரா (31), வசந்தகுமாா் (39), யோகானந்தம் (39), சந்திரப்பா (45), சஸ்வந்த் (40) உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாகலூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments