முகப்பு
கிருஷ்ணகிரி

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:56 am IST
பகிர்:

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காட்டேரி கிராமத்தில் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபா் குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளியை கைதுசெய்ய மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யாபாரதி உத்தரவின்பேரில், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சந்தோஷ் ஹடிமணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை மேற்பாா்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தனிப்படையினா் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில், இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது கல்லாவி, காமராஜ் நகரை சோ்ந்த சஞ்சய் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.