மேட்டூர் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி ஜலகண்டபுரம் பகுதிகளில் புதன்கிழமை
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி ஜலகண்டபுரம் பகுதிகளில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முடங்கியது. பல இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோனூர் சமத்துவபுரம், மேச்சேரி வேடன் கரடு திட்டு ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.