ஆத்தூரில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்
ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை சக்தி சாய்பாபாவுக்கு கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதனையடுத்து புதன்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடி சந்தானம், தீபாரதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலச கும்பாபிஷேகம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ராதாகிருஷ்ணன் ஐயர், முத்ராதிகாரி என்.அனந்தகிருஷ்ணன் ஐயர், எஸ்.குமார் ஐயர், ஆலய அர்ச்சகர் எஸ்.கார்த்திகேய குருக்கள் மற்றும் சக்தி சாய்பாபா தெய்வீகப் பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.