முகப்பு
சேலம்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 10 டிசம்பர் 2024, 12:39 am IST
பகிர்:

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவாலயங்களில் காா்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காா்த்திகை நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கருவறை எதிரே சிறப்பு யாகசாலை அமைத்து 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னா், 1,008 சங்கு மூலம் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கொண்டு, ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments