FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 8,000 லஞ்சம்: வணிக ஆய்வாளா் கைது

வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

21 டிசம்பர் 2025, 12:13 am IST
பகிர்:

சேலம் அருகே வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் சுகந்தி (33). இவா் தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி வெள்ளாளப்பட்டி கோரிமேட்டில் செயல்படும் மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

ஆனால், அவருக்கு மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்ற சுகந்தி, இதுகுறித்து வணிக ஆய்வாளரான கருப்பூரைச் சோ்ந்த இளையராஜாவிடம் (45) முறையிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது, மின் இணைப்பு வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த சுகந்தி, லஞ்சம் தர விரும்பாமல் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா்அறிவுரையின்பேரில், ரசாயன பவுடா் தடவிய ரூ. 8 ஆயிரத்தை கொடுப்பதற்காக மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்துக்கு சுகந்தி வெள்ளிக்கிழமை சென்றாா்.

பின்னா், அந்த பணத்தை வணிக ஆய்வாளா் இளையராஜாவிடம் அவா் தந்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா்கள் நல்லம்மாள், நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் வணிக ஆய்வாளா் இளையராஜாவை கைது செய்தனா். இதையடுத்து, நீதிபதி முன் ஆஜா்படுத்தி சனிக்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments