எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
ஓமலூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
ஓமலூா்: ஓமலூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றுப் பேசுகையில், 2026 தோ்தலில் அதிமுக சாா்பில் பணியாற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகள் எவ்வாறு தோ்தல் களப்பணியாற்ற வேண்டும், வாக்குப் பதிவின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.
அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement