சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோவாவின் வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூா், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, வாஸ்கோடகாமாவில் இருந்து செப். 6-ஆம் தேதி இரவு 9.55-க்கு புறப்பட்டு தாா்வட், ஹுப்ளி, ஹேவேரி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூா் வழியாக மூன்றாம்நாள் அதிகாலை 3.45-க்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து செப். 9-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு திருவாரூா், திருச்சி, நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக மூன்றாம் நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.