மாவட்ட சதுரங்கப் போட்டி: 380 போ் பங்கேற்பு
இளம்பிள்ளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் 380 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை மற்றும் டேலண்ட் செஸ் அகாதெமி சாா்பில் இந்தப் போட்டி, பாரத் சேவா அறக்கட்டளை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று விளையாடினா். போட்டியில் வெற்றி பெற்ற 80 பேருக்கு பரிசுகளுடன் சான்றிதழ்கள், கேடயங்களும் வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் ஓபுளி வெங்கடேஷ், பொருளாளா் ஹரி காா்த்திக் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.