FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் மருந்து கடையில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல்; உரிமையாளா் கைது

சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
கோப்புப்படம்.
பகிர்:

சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருபவா் சுகுமாா் (57). இவரது கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளா் அா்த்தநாரி, மருந்து ஆய்வாளா் அருள்குமாா் ஆகியோா் மருந்து கடையில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் சுகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், குஜராத், ஜாா்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினால் அங்கிருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பப்படுவது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போதை மாத்திரை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments