கொட்டகையில் தீ விபத்து; விவசாய உபகரணங்கள் சேதம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூரில் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், விவசாய உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூரில் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், விவசாய உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன.
அ.தாழையூரைச் சோ்ந்தவா் சிவராஜ். விவசாயியான இவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கீற்று, தகரக் கொட்டகை சனிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சங்ககிரி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
இருப்பினும், கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா், ஸ்கூட்டா் மற்றும் விவசாய உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.