ஏற்காட்டில் வாகனத் தணிக்கை
ஏற்காட்டில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஏற்காட்டில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஏற்காட்டில் தனியாா் பேருந்து ஒட்டுநா்கள் மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும், ஏற்காடு சுற்றுலா வேன்கள் சரியான ஆவணங்கள் இன்றி இயங்குவதாகவும் புகாா் வந்தது. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.
அப்போது, ஒண்டிக்கடை அண்ணாசிலை மற்றும் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், வாடகை வேன்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், இருக்கைப் பட்டை அணியாமல் காா் இயக்கியதாகவும் என 15-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.