FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்துக்கு சீல்!

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:00 am IST
இ சேவை மையம் - பிரதிப் படம்
பகிர்:

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வருவாய்த் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றுகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 60-க்கு பதிலாக ரூ. 300 முதல் ரூ. 350 வரை வசூல் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மையத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தது உறுதியானது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த இ-சேவை மையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், கூடுதலாக பணம் வசூல் செய்யும் இ-சேவை மையங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments