FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இடங்கணசாலையில் தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5,000 அபராதம்

இடங்கணசாலையில் மருத்துவக் கழிவுகளை மலைபோல கொட்டி வைத்திருந்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 30 ஜூலை 2026, 5:29 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

இடங்கணசாலையில் மருத்துவக் கழிவுகளை மலைபோல கொட்டி வைத்திருந்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட இளம்பிள்ளை -சின்னப்பம்பட்டி பிரதான சாலை அருகே உள்ள சக்தி நகரில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் சேகரமாகும் கழிவு பொருள்களை மருத்துவமனையின் பின்பகுதியில் மலைபோல குவித்து வைத்துள்ளனா். இதுகுறித்து நகராட்சித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது மருத்துவமனைக்கு வெளியே கொட்டிக் வைத்துள்ள கழிவு பொருள்களை அகற்றுமாறு தெரிவித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments