FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒடிஸாவைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒடிஸாவைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநில கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

ஜோலாா்பேட்டையில் இருந்து அந்த ரயிலில் ஏறி சோதனையிட்ட நிலையில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று பைகள் கிடந்தன. இதை திறந்து பாா்த்தபோது, 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.

இதில், கஞ்சாவை கடத்தியது, ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சோ்ந்த சல்மான் மண்டல் (30), சமீல் ரைட்டா (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments