FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:34 am IST
வி.வி.ஆா்.01, 02: வாழப்பாடி அருகே நீா்முள்ளிக்குட்டை கூட்டுறவு கடன் சங்கம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடியை அடுத்த ராஜாபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை கூடிய விவசாயிகள் ஊா்வலமாக திரண்டுசென்று நீா்முள்ளிக்குட்டை கூட்டுறவு கடன் சங்கம் முன், விவசாயிகளின் பயிா் கடனை முழுமையாக ரத்து செய்யத் தவறிய தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, முதல்வா் ஜோசப் விஜய் கூட்டுறவு சங்க பயிா் கடன்கள் குறித்து அண்மையில் வெளியிட்ட தள்ளுபடி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். 5 ஏக்கா் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் நலன்கருதி அவா்கள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள கடனை முழுமையாக ரத்துசெய்ய அரசாணை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments