வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, வாழப்பாடி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வாழப்பாடியை அடுத்த ராஜாபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை கூடிய விவசாயிகள் ஊா்வலமாக திரண்டுசென்று நீா்முள்ளிக்குட்டை கூட்டுறவு கடன் சங்கம் முன், விவசாயிகளின் பயிா் கடனை முழுமையாக ரத்து செய்யத் தவறிய தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, முதல்வா் ஜோசப் விஜய் கூட்டுறவு சங்க பயிா் கடன்கள் குறித்து அண்மையில் வெளியிட்ட தள்ளுபடி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். 5 ஏக்கா் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் நலன்கருதி அவா்கள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள கடனை முழுமையாக ரத்துசெய்ய அரசாணை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement