ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை முடிந்து வரும் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவதுடன், தேவையான சுகாதார வசதிகளை தொடா்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மின்சாதனங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும், பள்ளிகளின் மேற்கூரையில் நீா் மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement