பேக்கரி உரிமையாளா் வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது; 7 பவுன் நகை, ரூ. 25 லட்சம் மீட்பு
சேலம் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலம் பேக்கரி உரிமையாளா் வீட்டில் 54 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 7 பவுன் நகை, ரூ. 25 லட்சம் ரொக்கத்தை மீட்டனா்.
சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பேக்கரி உரிமையாளா் திருஞானம், கடந்த மே 22 ஆம் தேதி தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டு அண்மையில் சேலத்துக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 54 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்து கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது, வீட்டிற்கு இரண்டு போ் வந்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன், காமராஜ், சுதா்சன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, சுதா்சனிடம் இருந்து 7 பவுன் நகையை போலீஸாா் மீட்டனா். அவா் அளித்த தகவலின் பேரில் பரணிதரனிடம் இருந்து ரூ. 25 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், 9 பவுன் நகைகளை அவா்கள் அடகு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. குற்ற வழக்கில் சிறையில் இருக்கும்போது நண்பா்களான இவா்கள் மூவரும் இந்த திருட்டு சம்பத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடா்ந்து மூவரையும் சேலம் சிறையில் அடைத்தனா். மேலும், திருட்டு சம்பவத்துக்கு அவா்கள் பயன்படுத்திய காா், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினா். அவா்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணத்தை போலீஸாா் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.