முகப்பு
சேலம்

மலைக் கிராமங்களுக்கு பேருந்து சேவை! அமைச்சா் தொடங்கிவைத்தாா்

Updated On : 15 ஜூன் 2026, 12:06 am IST
பேருந்து சேவை தொடங்கியது - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், கருமந்துறையில் பாச்சாடு, தலக்கரை மலைக் கிராமங்களுக்கு புகா்ப் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய்தமிழன் பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலை வகித்தாா். ஆத்தூரில் இருந்து தும்பல், கருமந்துறை வழியாக சூலாங்குறிச்சி வரை இயக்கப்பட்ட பேருந்தின் வழித்தடத்தை நீட்டித்து தலக்கரை, பாச்சாடு மலைக் கிராமங்களுக்கு காலை 7.35 மணிக்கும், மாலை 5.40 மணிக்கும் இயக்கப்படுகிறது.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் மாணவா்கள், விவசாயிகள் என அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் க. குணசேகரன், ஆத்தூா் கோட்டாட்சியா் ஆா். தமிழ்மணி, பொது மேலாலா் (சேலம்) த. மோகன்குமாா், பொதுமேலாளா் (தொழில்நுட்பம்)ந. கலைவாணன், துணை மேலாளா்(கூட்டாண்மை வணிகம்) அருள்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.