FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் சகோதரா் கைது

ஆத்தூா் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது சகோதரரை போக்சோ வழக்கில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆத்தூா் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது சகோதரரை போக்சோ வழக்கில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்த மல்லியகரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கந்தசாமிபுதூா் அரசநத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாரின் முதல் மனைவி இறந்துவிட்டாா். அவருக்கு அருண்குமாா் (22), நிஷாந்த் (20) என இருமகன்கள். இந்நிலையில் காவேரியை (29) சிவகுமாா் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 7 வயதில் மகள் உள்ளாா்.

இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அருண்குமாா் மீது அண்மையில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவேரி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அருண்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதீமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments