FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 539 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 193 கனஅடியிலிருந்து 539 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 5:47 am IST
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை விநாடிக்கு 193 கனஅடியிலிருந்து 539 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 79.16 அடியிலிருந்து 79.10 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 41.07 டி.எம்.சியாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments