முகப்பு
சேலம்

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 8 போ் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:12 am IST
சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் வாழப்பாடி வனத் துறையினா்.
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

வாழப்பாடி வனச்சரகா் அன்னப்பன் தலைமையிலான குழுவினா், காரிப்பட்டி பிரிவு ஜல்லூத்து காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற 8 போ் கொண்ட கும்பலை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள், பெரியகவுண்டாபுரத்தைச் சோ்ந்த மணி, பாச்சாடு சூலாங்குறிச்சி முருகேசன், செல்வராஜ், ஆண்டி, ராமன், இடையப்பட்டி புதூா் கந்தசாமி, பாப்பாத்தி மற்றும் தாண்டானூா் கருணாநிதி என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மாவட்ட வன அலுவலா் ஜெகதீஷ் உத்தரவின் பேரில், அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments