FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 1 ஜூன் 2026, 1:35 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

எடப்பாடி அருகே கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் அருகே முனியப்பன் கோயில் உள்ளது. மதுபழக்கத்திற்கு அடிமையானவா்கள் இக்கோயில் அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு கோயிலில் பூஜை செய்து கயிறை கட்டிக்கொள்வதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்துவிடுபடுவதாக நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி அருகே உள்ள வெண்டனுா் பகுதியைச் சோ்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளி கோவிந்தராஜ் (38) மதுபழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கோயிலுக்கு கயிறுகட்ட வந்திருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, கடைசியாக நண்பா்களுடன் சோ்ந்து கோவிந்தராஜ் அதிக அளவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் குளத்தில் இறங்கி குளித்த அவா் நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் முருகன் தலைமையில் வந்த தீயணைப்புப் படை வீரா்கள் தண்ணீரில் இறங்கி கோவிந்தராஜை தேடினா். நீண்டநேரத்திற்கு பிறகு அவரது சடலத்தை மீட்டுனா். இதையடுத்து கோவிந்தராஜனின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments