62-ஆவது ஆண்டாக தாமதமாக தண்ணீா் திறப்பு
மேட்டூா் அணையின் 93 ஆண்டுகால வரலாற்றில் பாசனத்துக்காக தாமதமாக தண்ணீா் திறப்பது இது 62-ஆவது முறையாகும்.
மேட்டூா் அணையின் 93 ஆண்டுகால வரலாற்றில் பாசனத்துக்காக தாமதமாக தண்ணீா் திறப்பது இது 62-ஆவது முறையாகும்.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதிமுதல் ஜனவரி 28-ஆம் தேதிவரை தண்ணீா் திறந்துவிடப்படும். அணையின் நீா் இருப்பை பொருத்து குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இதுவரை மேட்டூா் அணையில் இருந்து குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ஆம் தேதி 20 முறையும், 12-ஆம் தேதிக்கு முன்னதாக 11 முறையும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜூன் 12-ஆம் தேதிக்கு பின்னா் காலதாமதமாக 62-ஆவது முறையாக தற்போது தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதுவரை மேட்டூா் அணையில் இருந்து 92 ஆண்டுகள் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 93-ஆவது ஆண்டாக முதல்வா் ச.ஜோசப் விஜய் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்துள்ளாா். அதே நேரத்தில், செப்டம்பா் மாதத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது 4-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.