FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொடைக்கானல் ஏரியில் கதவணை அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் தேக்குவதற்காக ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் தேக்குவதற்காக ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை 148 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹென்றி லிவிஞ்ச் என்பவர் நட்சத்திர வடிவில் அமைத்தார். 5.கி.மீ சுற்றளவும் 80-அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் இருந்து தான் பழனி நகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

மழைக் காலங்களில் ஏரிக்கு வரும் கூடுதல் தண்ணீர் வீணாக சாலைகளில் செல்லும் நிலை உள்ளது. இதைத் தடுத்து ஏரியில் கூடுதலாக தண்ணீர் தேக்க ரூ. 10 லட்சம் செலவில் 3 மீ. உயரத்திற்கு தடுப்பு மற்றும் கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments