பழனி கூட்டுறவு சங்கத்தில் புதிய துணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
பழனி கூட்டுறவு சங்கத்தின் புதிய துணைப் பதிவாளராக வியாழக்கிழமை இளமதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பழனி கூட்டுறவு சங்கத்தின் புதிய துணைப் பதிவாளராக வியாழக்கிழமை இளமதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பழனி சரக கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளராக பணியாற்றிய செண்பகராஜ் விருதுநகர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக பணியாற்றிய இளமதி, பழனி சரக துணைப் பதிவாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பழனி கூட்டுறவு சங்க அலுவலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.