கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து காட்டெருமை சாவு
கொடைக்கானலில் திங்கள்கிழமை காட்டெருமை 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
கொடைக்கானலில் திங்கள்கிழமை காட்டெருமை 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
கொடைக்கானல் சிவனடி சாலையில் தனியார் தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை, அருகிலுள்ள 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளது. தொடர்ந்து, இரண்டு நாள்களாக உயிருக்குப் போராடிய காட்டெருமை செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஹக்கீம் ஆகியோர் இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டு, உடற்கூறாய்வுக்குப் பிறகு அங்கேயே புதைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.