FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன: தமிழ்ப்புலிகள் கட்சி தலைவா் நாகை திருவள்ளுவன்

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன்.
பகிர்:

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்தாா்.

பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சாா்பில் தவெக ஆட்சியைக் கண்டித்தும், பழனி அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் இரணியன் தலைமை வகித்தாா்.

இதில் பழனி அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததைக் கண்டித்தும், 5 ஆண்டுகளுக்கு மேல் தூய்மைப் பணி செய்யும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசுப் பணி வழங்கியது தவறு. மேலும் கரூா் இடைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசுப் பணியை முதல்வா் விஜய் வழங்கியுள்ளாா்.

இதுமட்டுமன்றி முதல்வா் விஜய் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டதுடன், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் நிலவுகிறது. குற்றறச் சம்பங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துவிட்டன என்றாா் அவா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சிப் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments