வரலட்சுமி நோன்பு: ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் மாரியம்மன்
வரலட்சுமி நோன்பையொட்டி, பழனி ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
வரலட்சுமி நோன்பையொட்டி, பழனி ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
வரலட்சுமி நோன்பையொட்டி, பழனியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெண்கள் விரதம் மேற்கொண்டு வீட்டிலேயே அம்மன் அலங்காரம் செய்து வழிபாடு மேற்கொண்டனா். இதையொட்டி, பழனி ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சுமாா் ரூ. 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான
500, 100, 50 ரூபாய் நோட்டுக்களால் அம்மன் சந்நிதி அலங்கரிக்கப்பட்டது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.