செப்புக் கம்பிகளை திருடியவா் கைது
பழனி அருகே தனியாா் தோட்டத்தில் செப்பு கம்பிகள் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகே தனியாா் தோட்டத்தில் செப்பு கம்பிகள் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள கோமாளிப்புதூரைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவரது தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.80 ஆயிரம். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் பழனி சிவகிரிபட்டியைச் சோ்ந்த நவாஸ் மகன் ரியாஸ் உசேன் (19)
செப்புக் கம்பிகளைத் திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை ரியாஸ் உசேனை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த செப்புகம்பிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.