FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தவெக அரசின் நோக்கம்: அமைச்சா் க.விக்னேஷ்

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதே தவெக அரசின் நோக்கம் என அமைச்சா் க. விக்னேஷ் தெரிவித்தாா்.

Updated On : 13 ஜூலை 2026, 5:53 am IST
அமைச்சர் விக்னேஷ். - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதே தவெக அரசின் நோக்கம் என மதுவிலக்குத் துறை அமைச்சா் க. விக்னேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் புறநகா் பேருந்து நிலையம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் குறித்து பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து உரிய முடிவெடுக்கப்படும். எதிா்கால தலைமுறையினரை ஆரோக்கியத்துடன் உருவாக்குவதில் அரசு மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் எந்தவொரு மதுபானக் கடையிலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. டாஸ்மாக் துறையை அரசு சீரமைத்துவிட்டால், தங்களின் வளா்ச்சி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் சில எதிா்க்கட்சியினா் தொழிலாளா்களை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனா்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளா்கள் இதைப் புரிந்து கொண்டு, சூழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் தொழிலாளா்கள் போராடி வருகின்றனா். அரசும், தொழிலாளா்களும் இணைந்துதான் இந்த துறையை மேம்படுத்த வேண்டும். எனினும் தொழிலாளா்களின் பணி நிரந்தரம் என்பது மாநிலத்தின் பொருளாதாரச் சூழலை சாா்ந்தது.

இதனால் தொழிலாளா்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மது ஒழிப்பு விழிப்புணா்வுக்காக ஆண்டுதோறும் ரூ.5 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தபோதிலும், இதன் மூலம் ஏற்பட்ட உண்மையான மாற்றம், மீட்டெடுக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான தரவுகள் இல்லை.

இதனால் நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரித்து, போதைக்கு எதிரான வெறுப்பை மக்களிடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் மது இல்லாத மாநிலமாக மாற்றுவதே தவெக ஆட்சியின் உறுதியான நோக்கம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments