பழனி அருகே விவசாய நிலத்தில் தீ
பழனி அருகே விவசாய தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை மரங்கள் சேதமடைந்தன.
பழனி அருகே விவசாய தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை மரங்கள் சேதமடைந்தன.
பழனியருகே உள்ள பாறைப் பட்டி 54 புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் குமரேசன், குமரவேல். சகோதரா்களான இவா்கள் இருவருக்கும் சொந்தமாக அதே பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்று உள்ளது.
இந்தத் தோட்டத்தில் திங்கள்கிழமை மதியம் தென்னை மரங்கள், செடி கொடிகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனா்.
Advertisement
Advertisement
அதிக வெப்பம் காரணமாக தீப் பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.