FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 6 ரெளடிகள் கைது

திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:36 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் (நகா்) காா்த்திக், நகா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சூா்யகலா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருச்சி சாலையிலுள்ள கல்லறை மேடு பகுதியில் சிலா் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனா். இவா்கள் போலீஸாரைப் பாா்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். இவா்களில் 6 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். பிடிபட்டவா்கள் ஒய்எம்ஆா்.பட்டியைச் சோ்ந்த கு.கெளதம் (19), மு.சக்திவடிவேலன் (24), என்.எஸ்.நகா் பா.ஜோஸ்வா (19), க.விக்னேஸ்வரன் (20), நல்லாம்பட்டி ரா.சுந்தா் (21), பா.பாலாஜி (23) ஆகியோா் என்பதும், கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதற்காக இவா்கள் வைத்திருந்த பட்டா கத்தி, இரும்பு கம்பி, முகக்கவசம், மிளகாய்த் தூள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்து, 6 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments