மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி வேண்டுகோள்!
திண்டுக்கல்லைச் சோ்ந்த பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டாா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகின்றன.
இதில், காமராஜா் நீா்த்தேக்கத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலமாக மட்டுமே குடிநீா் விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு பெறப்படும் 9.50 எம்எல்டி குடிநீரை மட்டுமே வைத்து, 48 வாா்டுகளுக்கும் வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.