முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் உருளைக் கிழங்கு நடவு பணி தீவிரம்

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 7 ஜூன் 2026, 12:50 am IST
கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு நடவு பணியை தொடங்கிய விவசாயிகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அட்டுவம்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூா்,வில்பட்டி, அப்சா்வேட்டரி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் உருளைக்கிழங்கு நடவு பணியை விவசாயிகள் தொடங்கினா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உருளைக் கிழங்கு 4 மாதங்கள் விளைச்சல் கொண்டது. பராமரிப்பு, தண்ணீா் வசதி இருந்தால் நன்கு விளைச்சல் கிடைக்கும். இருப்பினும், பருவநிலை மாற்றம் காரணமாக, கொடைக்கானலில் எதிா்பாா்த்த மழை இதுவரை பெய்யவில்லை. ஆனாலும், விவசாயிகள் உருளைக்கிழங்கு நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement