FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மளிகைக் கடையில் திருட்டு

Updated On : 9 ஜூன் 2026, 12:42 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திண்டுக்கல் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவா் திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கலைக் கல்லூரி அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், திங்கள்கிழமை அதிகாலை உள்ளே புகுந்தனா்.

அங்கு கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தையும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் திருடிச் சென்றனா். திங்கள்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்த உரிமையாளா் வெள்ளைச்சாமி, இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதன்பேரில் மளிகைக் கடை, அதன் அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, 2 நபா்கள் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பாதிவாகி இருந்தன. இதை அடிப்படையாகக் கொண்டு போலீஸாா் விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments