முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் சாலைகளில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு

கொடைக்கானல் சாலைகளில் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 2:05 am IST
கொடைக்கானல் அண்ணா சாலையில் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் தேங்கிய கழிவுநீா்.
பகிர்:

கொடைக்கானல் சாலைகளில் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணா சாலையில் கழிவுநீா்க் குழாய், பேருந்து நிலையத்திலுள்ள கழிவு நீா்த்தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீா் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும், வாகனத்தில் செல்பவா்களும் மிகுந்த சிரமமடைந்தனா். இதேபோல நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி வருவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகா்நல அலுவலா் அரவிந்த் கூறியதாவது:

Advertisement

Advertisement

கொடைக்கானலில் பல்வேறு வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது. நகராட்சியில் பணியாளா்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. நகா்ப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கழிவு நீா்க் குழாய்களை சீரமைக்க மாவட்ட நிா்வாகத்திடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.