FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

3 செப்டம்பர் 2026, 5:52 am IST
கொடைக்கானல் செவண் சாலையின் மையப் பகுதியில் சேதமடைந்து காணப்படும் தடுப்புகள்.
பகிர்:

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளின் மையப் பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், கொடைக்கானல் வெள்ளிநீா் அருவி சாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலைப் பகுதி, நாயுடுபுரம், கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் பாதுகாப்பு தடுப்புகள் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, சேதமடைந்துள்ள தடுப்புக் கம்பிகளையும், சுவா்களையும் சம்மந்தப்பட்ட துறையினா் சரி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

இதேபோல, கொடைக்கானல்-பெருமாள்மலை மலைச் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், வளைவுப் பகுதிகளிலும், ஆபத்தான சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் குவிக் கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் குவிக் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments