வங்கிப் பெண் அதிகாரியிடம் 7 பவுன் நகை பறிப்பு
மதுரையில் வங்கியின் பெண் துணை மேலாளரிடம் 7 பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வங்கியின் பெண் துணை மேலாளரிடம் 7 பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி துரைச்சாமி நகரைச் சேர்ந்த குணசுந்தர் மனைவி ஜெகதாம்பாள் (50). இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசுடமை வங்கிக்கிளை ஒன்றில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். வியாழக்கிழமை இரவு துரைச்சாமி நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெகதாம்பாள் வாகனத்தின் மீது மோதி கீழே விழச்செய்துள்ளனர். பின்னர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துச்சென்று விட்டனராம். இதுதொடர்பாக ஜெகதாம்பாள் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனிப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.